பூமாயி அம்மன் கோயிலில் மே 21ல் பொங்கல் விழா
ADDED :4900 days ago
திருப்புத்தூர்:திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா நிறைவை முன்னிட்டு மே 21ல் பொங்கல் விழா நடக்கிறது.பூச்சொரிதல் விழா நிறைவடைந்தவுடன் மே 12ல் அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து வசந்தப் பெருவிழா துவங்கியது.தினசரி இரவு அம்மன் சர்வ அலங்காரத்துடன் திருக்குளத்தை வலம் வருதல் நடக்கிறது.பத்தாம் நாள் நிறைவு நாளன்று மாலை 3 மணிக்கு கோயில் வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறும்.