யார் இந்த காருண்ய பித்ரு?
ADDED :1949 days ago
பெற்றோர், தாத்தா, பாட்டி தவிர்த்த மற்ற உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார் என பலரும் நம்முடன் நெருங்கிப் பழகுவதுண்டு. ஆனால் மரணம் இவர்களையும், நம்மையும் பிரித்து விடுகிறது. இவர்களுக்காக ஆண்டுதோறும் மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்யலாம். நெருங்கிப் பழகிய இவர்களை ‘காருண்ய பித்ருக்கள்’ என்பர். அதாவது கருணை கொண்ட முன்னோர்கள்.