ம.குடிகாடு கோவிலில் ஊரணி பொங்கல் விழா
ADDED :4897 days ago
சிறுபாக்கம் :ம.குடி காடு மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சிறு பாக்கம் அடுத்த ம.குடி காடு ஆகாச துறை மாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் காப்பு கட்டும் உற்சவத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி ஊர் வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு பூஜை செய்தனர். இரவு அலங்கரித்த வாகனத்தில் மாரியம்மன் வீதியுலா நடந்தது.