தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா
ADDED :2095 days ago
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் முதல்நாளான இன்று, தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் பெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை வழிப்பட்டனர்.