பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா
ADDED :1799 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி , நேற்று காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா
சமேத பாலசுப்ரமணியருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்ட நிலையில், எளிமையான முறையில் நடந்த வழிபாட்டில் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.