உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திரச்சாவி மனதில் இருக்கு!

மந்திரச்சாவி மனதில் இருக்கு!

* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது.
* முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும்.
* கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம் என்பதால் தீர்வு உடனே கிடைக்கும்.
* உண்மையைப் பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.
* பெற்றோர், குருநாதரை தெய்வமாக கருதி வழிபடுங்கள்.
* மாசு இல்லாத மனமே கடவுள் குடியிருக்கும் கோயில்.
* கடவுளை அன்புடன் வணங்குங்கள். அவரிடம் வியாபாரம் செய்யாதீர்கள்.
* மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.   
* தர்மவழியில் செலவழித்த பணம், வழிபாட்டில் செலவழித்த நேரம் இரண்டும் நம்முடையது.      
* காலையில் எழும் போது, உணவு உண்ணும் போது, படுக்கும் போதும் கடவுளை நினையுங்கள்.
* மானம் காக்கும் ஆடை போல மனதைக் காக்க வழிபாடு அவசியம்.
* மனிதனின் வாழ்க்கை வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.  
* பெற்றோரை விட சிறந்தவர் உலகில் யாருமில்லை.
* பெரியவர்களை வணங்காவிட்டாலும், அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.       
* இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமைகளை அடுத்த பிறப்பில் அனுபவிக்க நேரிடும்.
* உறவினர் கைவிடலாம். ஆனால் தானமும், தர்மமும் கைவிடுவதில்லை.      
* பயிருக்கு முள்வேலி போல் நம் பணத்திற்கு தர்மமே வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !