விளக்கு ஒளியில் ஜொலித்த அனுமன் மலை
ADDED :1740 days ago
மூணாறு : சபரிமலை மகரஜோதியின் போது கேரளா மூணாறு அனுமன்மலையில்15,000 விளக்குகள் ஏற்றப்பட்டன.
மூணாறில் உள்ள காளியம்மன் கிருஷ்ணன் நவகிரக கோயில் சார்பில் அதன் அருகில் உள்ள அனுமன்மலையில் சபரிமலையில் மகரவிளக்கின் போது விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். கடந்தாண்டு 30,001 விளக்குகள் ஏற்றப்பட்டன. அதே எண்ணிக்கையில் இந்தாண்டும்ஏற்ற முடிவு செய்யப்பட்டது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நேற்று காலை வரை பெய்த மழை ஆகிய காரணங்களால் 15,000 விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் மலை ஜொலித்தது. கோயிலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பாதுகாப்பு குழு தலைவர் மனோஜ் செய்தார்.