உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் மண்பானை பொங்கல்

திருப்பரங்குன்றம் கோயிலில் மண்பானை பொங்கல்

 திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை பொங்கலையொட்டி சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.


வழக்கமாக தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து, பிரசாதம் மட்டும் சுவாமிகளுக்கு படைத்து பூஜை நடக்கும். தை பொங்கலை முன்னிட்டு மடப் பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து, மஞ்சள் கிழங்கு, வாழை இலை, கரும்பு வைத்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பின் உற்ஸவர்கள் சுப்பிரமணி சுவாமி, தெய்வானை முன் படைக்கப்பட்டது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்களுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !