மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1644 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1644 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1644 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் அம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டார்.இக்கோயிலில் பங்குனித் திருவிழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம். இதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு நகரில் பல்வேறு இடங்களில் பூக்களை தட்டுகளில் பரப்பி அலங்கரித்து வைத்திருந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க பெண்கள், இளைஞர்கள் பூத் தட்டுகளை கைகளில் ஏந்தி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து இரவு 11:00 மணி தொடங்கி மூலவருக்கு மல்லி, ரோஜா, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.இதேபோல் கோயிலில் அருள்பாலிக்கும் அனைத்து பரிவார தெய்வங்களும் அலங்கரிக்கப்பட்டனர். பின்னர் காலை சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மார்ச் 19 அன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல், மறுநாள் கோயில் கொடிமரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு பங்குனி விழா நடக்க உள்ளது. பத்து நாட்களும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருவார். மார்ச் 28 அன்று இரவு 8:00 மணிக்கு மின்சார தீப தேரோட்டமும், மார்ச் 30 இல் பக்தர்கள் நேர்த்தி கடனாக பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும், ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.
1644 days ago
1644 days ago
1644 days ago