உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உலா வந்து அருள்பாலித்தனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்தாண்டு போல் இந்தாண்டும், சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள், பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளன. திருவிழாவின் 6ம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர். ஆடி வீதியில் சுவாமி புறப்பாடு சமயத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை. முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்., 22ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்., 23ல் திக் விஜயம் நடக்கிறது. திருக்கல்யாணம் ஏப்., 24 காலை, 8:45 முதல், 8:50 மணிக்குள் நடக்கிறது. இதை கோவில் இணையதளம் www.madurai meenakshi.org மூலம் பக்தர்கள் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !