சிவபுரிபட்டியில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :1711 days ago
சிங்கம்புணரி; சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு நடந்தது.நேற்று சனி பிரதோஷத்தையொட்டி இக்கோயிலில் உள்ள நந்தி சிலைக்கு மாலை 4:30 மணிக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு, பால் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நந்திதேவருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் வீதி உலா வந்தார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர்கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.