நான்கு தாயார் தரிசனம்
ADDED :1724 days ago
பங்குனி உத்திரநாளில் அழகர்கோவில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கும். அன்று காலையில் அழகர் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி ஆகிய நான்கு தாயார்களுடன் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு பெருமாளுக்கு நான்கு தாயார்களுடன் திருமணம் நடந்தேறும். அதன் பின் பெருமாள், தாயார்களுடன் பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவார். அன்று ஒருநாள் மட்டுமே பெருமாளை நான்கு தாயார்களுடன் ஒன்றாக தரிசிக்கலாம்.