உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னிப்பது கோழைத்தனமா...

மன்னிப்பது கோழைத்தனமா...

* மன்னிப்பது கோழைத்தனம் அல்ல. அது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மாலை.
* மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே உண்மையான வீரம்.  
* எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை உண்டு.  
* நாம் செய்யும் எந்த செயலும் நற்செயலாக இருப்பது அவசியம்.  
* சுயக்கட்டுப்பாடும் அமைதியும் தான் ஆன்மிக வெற்றிக்கு வழிவகுக்கும்.  
* தேவைக்கு அதிகமாக சேர்த்த செல்வம் பயனற்றுப் போகும்.  
* பிறர் எப்படி நடக்க ஆசைப்படுகிறீர்களோ நீங்களும் அப்படியே இருங்கள்.
* தீய எண்ணங்களே அத்தனை துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம்.  
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.
* உண்மையின் பாதையில் நடப்பவருக்கு  உபதேசம் தேவையில்லை.
* அகந்தை அழிந்தால் அடக்கம் தானாக வந்துவிடும்.
* கொல்லாமை, ஒழுக்கம் இரண்டும் அறத்தின் ஆணிவேர்.
* பிறருக்கு மனமுவந்து கொடுப்பவர்கள் சொர்க்கம் செல்வர்.  
* தியானத்தால் மனம் துாய்மையாகும்.  
* தியான பயிற்சியால் துன்பக்கடலை எளிதாக கடக்கலாம்.  
* கோபம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை அழிக்கும்.
* பிறர் பொருளை அபகரித்தால் நம் பொருள் நம்மை அறியாமலே மறையும்.
* படிக்கும் நுால்களை கொண்டே ஒருவரது அறிவை அளக்கலாம்.   
* எப்போதும் பயந்து கொண்டே இருப்பவர் பிறரையும் பயப்படச் செய்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !