மூலிப்பட்டி தவசிலிங்க சுவாமி கோயிலில் மிருத்யுஞ்சய ஹோமம்
ADDED :1641 days ago
விருதுநகர்: விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் மூலிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி மிருத்யுஞ்சய ஹோமம் சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கவில்லை.