உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராகி மந்திராலயத்தில் ஆனி நவராத்திரி விழா

வாராகி மந்திராலயத்தில் ஆனி நவராத்திரி விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூ.கவுண்டம்பாளையத்தில் வாராகி அம்மன், குங்கும அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே வாராகி மந்திராலயம் உள்ளது. இங்கு ஆனி நவராத்திரி விழாவை ஒட்டி, வாராகி அம்மன் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நவராத்திரியின் மூன்றாம் நாளில், குங்கும அலங்காரத்தில், வாராகி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !