உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்தாண்டு மார்ச் முதல், கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. தற்போது ஆடி மாத பவுர்ணமி திதி, நாளை காலை 10:38 முதல், 24ம் தேதி காலை 8:51 மணி வரை உள்ளது.திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாதம், பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம். கொரோனோ தொற்றை கட்டுப் படுத்த பொதுமக்கள், பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !