மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4820 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4820 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4820 days ago
நாரா யணரே நல்லவை குண்டமெனச்சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார்ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்துவாறு வகையெல்லாம் வந்து வழிப்படவேநின்றார் தவசு நெடியநா ராயணரும்குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல் உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல் அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார்தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாதுஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசுவாசக் குழலுமையை மதலை யுருவாக்கவேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக் கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்றுஅத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தேகற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில்சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனைவீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்கஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான்பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே 20 சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்துஅரகரா அவள்தான் அன்றுநின் றதவமும்இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய்அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தேசீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தேநாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும்எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம்வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண்சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப் பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால்பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய்நாமிருப் பதுவோ நாலு திரையதனுள்ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம்இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாதுவச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில்என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால்அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர்நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானைசெல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும் அய்யா மக்களுக்கு அருளல் சீமையைம்பத் தாறு தேச நருட்களையும் 40நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவேசெல்லவை குண்டச் சீமானு மப்பொழுதுவல்ல தவமும் மனதுளரா தேமுடித்துஉலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத்தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானைவடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்குநடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும்அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவேசாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமேநாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார்நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல்தினந்தோறும் வந்து சேரும் நருட்களதுஎண்ணக் கூடாது எவராலு மன்போரேதிண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரேசாணா ரிடையர் சாதி வணிகருடன்நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல்சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன்ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன்கம்மாள னீழன் கருமற வன்பரவன்வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர் 60 சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும்முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானைஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்தவாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரேகிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும்இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய்ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில்வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல்சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய்ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும்சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார்உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும்சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார்பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல்திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார்தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார்கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டிஅந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச்சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார்உடலை யுருக்கும் உற்ற சயஇருமல் 80 குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த்தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப் பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண்கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லிஎன்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரேபதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில்விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார்மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில்ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானைநொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும்அன்பா யுலகில் ஆனதே சத்தோரும்ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும்கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார்முன்னாள் மொழிந்த முறையாக மம்போலேஇந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார்வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலேமெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன்சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்துகோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாதுகர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம் 100 தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும்செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன்அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்குஎளியோர் வலியோர் எல்லா மொருப்போலேபழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார்தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்திதோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்குசார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார்சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச் சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படிநல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லிசாதிபதி னெண்ணும் சடல வரவுமற்றுஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர்எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலேஅல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார்அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியேஎல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியேதெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமதுமெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்கஇன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து 120 மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர்சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கிமேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத்தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்துஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியேநாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப்போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண்சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப்பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார்மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில்மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார்வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்துசொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார் திருவாசகம் 4 1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு, கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி, உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி, மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே, மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே, முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே, முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே, ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே, இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே, வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே, வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல் உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே, பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந் தன்னே என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார். அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ் சரி, இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள். பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார். எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம் ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க, அதையறிந்து நீங்களும் ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார், உடனதுகளெல்லாம் அய்யாவாணை நாங்களொன் றும் ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார். உடனே நாராயண வைகுண்ட சுவாமி தானே ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது, பேய் செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது பேய் செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் பேயை எரிக்கவேணு மென்று நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார். பேய்களை எரித்தல் பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்துஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றேஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார் வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கேபரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி 140விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார் விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடுதுதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யாஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான்பதினை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார் பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம் மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்புபொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம்வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார் நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றேகாரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சுபூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகிவழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகிஅழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார் ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாகஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும்மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று 160தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்துஇணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம்குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம் உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம் வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும்இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப் பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார் ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிதுவாச மலரோனும் மற்றோரும் போகரிதுஎன்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்திஅன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானைஉடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள்திடமே குளறி சிந்தை மிகக்கலங்கிபேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடிமாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச்சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழிஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும்என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம் 180 சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சேஅய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லைபொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம்நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லைதம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லைநமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர்எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார்அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால்சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார்போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலேகோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர்அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார்கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்திஅபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார்கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்றுமனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்துஇனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவேவரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவேதுரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண்பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம் 200 இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவேஎன்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன்அன்று தலையோடு அந்தமுனி தானடித்துவைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால்மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமேபொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும்ஆரவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான்சீர்பரன் முதலாய்ச் சிந்தை பதறணுமேஉங்களுட மூப்பு உகத்திலினி வாராதுஎங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண்எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண்பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்குஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்துநானே யிதுமேவித் தாறேனென் றிப்போதுஇந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும்எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில்ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய்நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து 220 அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்றுநாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும்காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார்தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனேபண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்கஎன்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்றுநன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்துஇந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போஇந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீபொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்துதேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்துஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்துஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டுவாகாய் நரக வாசல் தனைப்பூட்டிநல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி 240 பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்துவல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப் பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமேஇம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாதுஎம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனிகேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்துநாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவதுமூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமேநீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்துஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்துஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து 260 நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளானவல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமேஆனதினால் பேய்க ள் அந்நீசக் குலமதினால்வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்நன்று முனியே நம்பேரில் குற்றமில்லைமுன்னுள்ள ஆகம முறைநூற் படியாலேஎன்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயைமாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சிநாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சிஎல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லைவல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சிஎன்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டிமனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானைஅப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும்இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத் 280 தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச்சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக்கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரேஎன்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுதுஅன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார்காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும்சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள்ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம்வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார்உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும்திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும்அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொருமணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும்அப்போது பேய்கள் எல்லோருந் தானழுதுஇப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும்உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும்தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண்என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரைபார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க் 300 காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும்என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்துஉன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும்என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார்அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடிஎன்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்றுவன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார்அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும்இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில்ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்துகைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார்திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்துவிட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்துமலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவேவிலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய்அய்யா வுரைத்த ஆணை தவறாமல்மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானைஅய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணைமெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம்தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும் 320 எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்துஅய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறிமெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச்சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும்பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவேவைத்த உடனே வைகுண்டர் முறைப்படியேமெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும்ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவேவாகாக முன்னூல் ஞாய வழிப்படியேவாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன்சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரேதொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும்பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார்உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள்படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவேஅசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும்செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும்கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்றுமன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார்இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து 340 அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவேமலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறியஇலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறிஅய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான்மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம்அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும்முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடெனஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல்சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானேஎன்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள்அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சிகேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறைநாட்டுக் குடைய நாரா யணரிவர்தான்மன்று தனையளந்த மாயத் திருநெடுமால் என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார் ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கிலோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டிவேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்றுநாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார் வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன 360விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத்துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திரவருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே மந்திரவாதிகளின் விசையடக்குதல் மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள்விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்றுநினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும்அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய்கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும்முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச்சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும்கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும்விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடிஅதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர்ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்துஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதிபுவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்திநமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும்சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டுசுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பிவேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக் 380 கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச்சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள்கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில்சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும்கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்துஎன்ன விதமோ என்று மிகக்குளறிமன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கிஎங்கே யினிப்போவோம் என்று மனம்பதறிசங்கை யழிந்து சருவில் மிகஇறங்கிதட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார்பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக் குறத்தி வருதல் குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்குஉரைத்து அவரிருக்க உடையவ னாரருளால்குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கிவிறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னேகண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லிவண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்துஅருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச்சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்துபசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம் 400 விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர்உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர்தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும்நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார்வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும்பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண்நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார்அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால்தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால்என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர்நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோசொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம்எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்றுசந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பிவந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில்கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்துபண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனேகேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார்நாட்டுக் குடைய நாராயணர் பாலன்பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச் 420 சிறந்து தவசு செய்யு முறைமையினால்துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப்பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல்ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பிஇருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப்பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம்இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும்போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான்வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னேநல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சுபொல்லாத தெல்லாம் போக விதியாச்சுஉந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால்எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம்அப்போது மலையில் வாழு மலையரசர்இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோஅதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்று சொல்லோங்காண்பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டருமேமாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும்உபாந்திர வாகடமும் உபாயச் சமூலமதும்மாயக் கருவும் மாரண வித்தையதும் 440 உபாயக் கருவும் உயர்ந்தகரு மோடிகளும்தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும்வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம்எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும்கட்டுடனே யிப்போ கருசமூ லத்துடனேஒக்கவைத்தோ மென்று ஓருடக்கா யுடக்கிமிக்க என்முன்னே மேதினியீ ரேழறியஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசாநாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார்உடனே மலையரசர் ஒக்க மனதலைந்துகுடலே மருண்டு குறுக முழிமுழித்துவம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவேதம்பெலங்க ளற்றுத் தலைசாய்ந் துடனயர்ந்துமாட்டோமென்றோ மானால் மலைமிருகங் கேளாதுவீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாதுகுடியிருப்பு நமக்குக் குன்றுமே லங்குமில்லைபடியீரே ழளந்த பரமனம்மை யிங்குவிடார்அய்யாவுரைத்த ஆணை வழிப்படியேமெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம்அல்லாதே போனால் அம்மலையி லிருப்புமில்லை 460 எல்லா மறிந்து இனிப்போவ துமரிதுஎன்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்துஅன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டுஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரேகையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லைஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனேவீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம்என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார்நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொருசூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம்மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம்எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல்எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும்நல்லதுவே யென்று நாடி மலையரசர்வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல்எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார்அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண்மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர்எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையாதங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே 480 இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள்விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம்மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்குஉலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும்இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும்நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும்என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார்அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில்வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம்செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால்நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னுதுரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள்என்று சபித்தார் எம்பெருமா ளானவரும்அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால்சொன்ன நரகில் செத்திறந்து போவோமெனஅன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார்போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்துவானோ ரறிய மந்திரமா ஞாலமற்றுமந்திர வித்ø மாமுனிவன் சாஸ்திரமும்தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி 500வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலேமெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதிமேலோக மான வைகுண்ட ராச்சியமும்பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும்உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்குஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம்சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார் நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச்செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய்மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும்பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில்உண்டாகி வாழ்ந்து உலக மறிவதற்குகுண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும்ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்துவாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரேஎன்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்துமன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே வைகுண்டர் தர்மம் கூறல் இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்றுஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ 520 காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோமாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோவீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோவைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல்பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோஅவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோஎவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமேஎன்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக்கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார்எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்றுநல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத்தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும்என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலேநன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்கஎங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லிசங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார்நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள்துரித முடனே தொல்புவியில் வாழுகின்றபட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும் 540 அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும்ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும்கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும்உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரேமிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோஉங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச்சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோவாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவேதாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலேமிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்குஉறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமேபட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல்கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோசிறிது பெரிது என்றுமிகச் சீறாமல்உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்றுகூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோநாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்குபுல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக்கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும் 560 தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்துமங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியேகூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலேஎய்யாமல் நாதன் எல்லோருந் தானறியசெய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடிகுன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டுகன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக்குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில்பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள்விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லைநொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லைதொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லைமையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார் இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப்புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு580முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார் இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டுஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்றுசெப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்றுநற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார் கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல் நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்துகூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்தசாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறிபாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான் வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டுமந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர்விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான் நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்துமூட மடைந்த முழுநீச மாபாவிஇருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகிவருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் 600 ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடிசேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில்சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன்ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடிசரடன் கரடன் சவுனி கெவுனியுடன்முரட னுடனே மூர்க்கர் முழுமூடர்படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக்குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்துவாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடிதோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடிஅம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடிவம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூடவெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடிஅடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடிஇத்தனை யார பாரத் துடன்நீசன்தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்துவந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில்தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடிகொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான்கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம்வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய் 620 நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலேதுடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய்ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும்பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதேஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும்மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால்ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான்தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால்பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால்கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான்வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம்வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போநமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும்குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில்வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்றுமெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல்நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத்தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்திஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும்அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண் 640 ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும்சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும்சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்றுதொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவேஎன்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன்ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான்ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்னவாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்றுநினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண்மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கிஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச்சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழிஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில்ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்துபாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியைஎன்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்துஅன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான்சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலேவேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண்எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே 660 கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான்தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசேகர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும்சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம்கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டுபூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதைசாமிதர்மத் தாலே தோச மதையழித்துநற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள்சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும்மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித்தனுவை யடக்கித் தவசு மிகஇருந்துநல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்துவல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்துஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான்என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்கநன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்துசொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான்எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்னசொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியேநல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான் 680 இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவேசொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண்தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால்பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும்நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவேசும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமேஎன்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான்மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான்அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும்இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால்போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில்ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப்பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப்பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும்சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம்பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியேஇப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும்மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னேஎன்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில்அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் 700ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக்கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம் கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம்தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்றுபூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும் மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகிஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர்மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம்ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும் எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்லபழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையாஅழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும் தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றிபுசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோவசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னைவிசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றிவைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி 720நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்துசெய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்றுமைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்துமெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்துஅப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்றசெப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம்பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதிஅவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா 740செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையாஇவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான் என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப்பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம்மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்றுகொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன் வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடாபாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளிநித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச் சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லைவராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான்இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய் காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணிநாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் 760வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான்தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன் அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான்இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டுஇப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான் மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்னவழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில்கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன் ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும்சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம்ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய்நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான் என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும்பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத்தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத்தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான் 780ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்னகார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான் அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான்துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக் கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும்வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன் கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டுகடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத்தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்றுநடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான் பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான்கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான்சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்றுவரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாடகம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாடகொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோடபும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானேஇந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானைகுந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி 800 இங்கேகொடு வாறேன் என்று கௌடனுமேதுங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்துஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்துவாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப்பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமேகரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்திநீசன் விடைவேண்டி நீணில முமறியபாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன்வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்துகாரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்துஇப்போ பதறி எழுந்திருந்து வோடவென்றுஅப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலேநன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதிதின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதிஎன்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப்பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல் ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டுஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர்ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல்நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி 820நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவேசெல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக்கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித்தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவேஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம்வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார்பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக்கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும்சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோநாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சேபேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டுஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லிநீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண்தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதைஅறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்துவெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண்நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச்செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுதுகூடி நடந்தார் குருவே குருவேயெனநாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக் 840 கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார்பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார்அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்துஎப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம்வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்துமுன்பு விதியால் முழுநரக செத்திறந்துஎன்று சபித்து எம்பெருமாள் தானடந்துபண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்றுநன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர் பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச்சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும் நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளேபல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்லவெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போடவல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார் அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயாசெப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய்தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையாஎப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன் 860 ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சேவேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கிகூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்தஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே முட்டப்பதி விஞ்சை 1 இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவிமுப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்துஎப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பாஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளுமூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்றுதாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப்பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லிஎண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசுகண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்துஎண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறியகண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்திபுண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்துஎண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே 880 மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால்உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச்செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப்பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்துசெய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சுபோய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்றுமெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான்தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல்இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்துகனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத் தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்துஎன்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப்பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம்கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும்தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும்பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே 900 காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம்சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்திவாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்ககாட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச்செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீவல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும்எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய்சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய்அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய் நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பாஎன்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பாஉன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக்கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடிநடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாதுபுழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும்கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல் 920 ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல்பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்றுகிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத்துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர்சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்றுவீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார்பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறியமண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத்தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டிகருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்துசீமை நருளறியத் தேசந் தனிலாண்டுதாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்துமனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில்தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும்எல்லா மடக்கி யானுன் னிடமிருந்துநல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக்காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னேஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலேநல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில்செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன் 940 வாகனத் தேரும் வருமா ஞாலத்திருந்துகோகனக மாலே குணமாக வேகூடிக்காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார்தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய்இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோவன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீபதறாதே போயிருநீ பாரத் தவசியிலேகுதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலேவாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளுபோறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளுஎன்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயெனமன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக்கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார்பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள்விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத்தெச்சணா பூமி சென்று தவத்ததிலேஉச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார்நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனேபடந்தார மாயன் பண்டு தவமிருந்ததலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார் 959
4820 days ago
4820 days ago
4820 days ago