தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு பஞ்சதீபம் ஆரத்தி
ADDED :1512 days ago
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு பஞ்சதீபம் ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
கொரோனா நோய் பெரும் தொற்று குறைந்ததை அடுத்து,தமிழக அரசால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தஞ்சை பெரிய கோவில் திறக்கப்பட்டு மூலவர் பெருவுடையாருக்கு பஞ்சதீபம் ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.