தரிசனத்திற்கு அனுமதி: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1512 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கொரோனா நோய் பெரும் தொற்று குறைந்ததை அடுத்து,தமிழக அரசால் விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.