மத்திய இணை அமைச்சர் முருகன் அவிநாசியில் சாமி தரிசனம்
அவிநாசி; அவிநாசி கிழக்கு ரத வீதி காசி விநாயகர் கோவிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார்.
அவிநாசி சேவூர் ரோட்டில் கிழக்கு ரத வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் பா.ஜ., வின் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார். அவிநாசி பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயருக்கு,மத்திய இணை அமைச்சர் முருகன் அர்ச்சனை செய்தார். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் சிவகுமார்,தியாகராஜன் ஆகியோர் பரிவட்டம் கட்டி,விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கினர். இதில் மாநிலச் செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் மாரிமுத்து, அவிநாசி சட்டமன்ற இணை அமைப்பாளர் கதிர்வேலன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், கோவில் மற்றும் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன்,அவிநாசி நகர தலைவர் ரமேஷ், அவிநாசி மேற்கு ஒன்றிய தலைவர் பிரபுரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.