உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, கொளுத்தும் வெயிலில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

திருப்புவனத்தில் பங்குனி திருவிழா, கொளுத்தும் வெயிலில் அக்னிசட்டி எடுத்த பக்தர்கள்

திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு நாளான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர்.


திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தில் வசிப்பவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் பத்து நாளில் ஏதாவது ஒருநாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். நிறைவு நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்தனர். பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நகர் முழுவதும் வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக அன்னதானம், மோர், சர்பத் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்களும் பக்தர்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !