குருவித்துறை கோயிலில் குருபகவானுக்கு லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :1468 days ago
சோழவந்தான்: குருபெயர்ச்சியை முன்னிட்டு குருவித்துறை குருபகவான் சன்னதியில் லட்சார்ச்சனை துவங்கியது. இங்குள்ள சித்திர ரதவல்லபபெருமாள்கோயில் முன் தனி சன்னதியில் சுயம்புவாக குருபகவான் உள்ளார். நவ.,13 மாலை 6:10 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு காலை 10:45 மணிக்கு பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், ராஜா, பாலாஜி குழுவினரால் குருபகவானுக்கு மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. நவ.,13 மதியம் 1:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கோயிலுக்கு பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.