உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவில் கும்பாபிஷேகம்

பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவில் கும்பாபிஷேகம்

மதுக்கரை: மதுக்கரையை அடுத்த வாளையார் அருகே புதுப்பதி கிராமத்தில், ஆனந்த வேதாஷ்ரமம் உள்ளது. இங்கு பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி கோவிலில் புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரம், சிவலிங்கம். சிவன், பார்வதி, வினாயகர், முருகன் மற்றும் நந்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இதன் கும்பாபிஷேக விழா, 12ல் மூத்த பிள்ளையார் முதல் வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து வேள்வி யாகம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணி முதல் என் திசை பாலகர் வழிபாடு, முளைப்பாரி வழிபாடு, காப்பு கட்டுதல், மங்கள ஆராதனை, அஷ்டபந்தனம் என் வகை மருந்து சாத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 11:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம், மகா தரிசனம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நடந்தன. இதையடுத்து சுவாமிகளின் அருளுரை, மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பத்து வித தரிசனம் மதியம் அன்னதானம் உள்ளிட்டவை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !