உலக நன்மைக்காக யாகம்
ADDED :1404 days ago
பொங்கலூர்: காங்கயம் ஊதியூர் கொங்கணவர் திருப்பதி அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காகவும் தொற்று நோயிலிருந்து மக்கள் நலம் பெறவும் அறக்கட்டளை குருஜி ஆறுமுகசாமி தலைமையில் மகா யாகம் நடந்தது. யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று, மூலிகைகள் கலந்த அன்னதானம் உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கொங்கணவர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.