சமுதாயத்தில் உயர்நிலையை அடைய
வழிகாட்டுகிறார் ராஜாஜி
* கடவுளை நம்பு. அப்போதுதான் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவாய்.
* நல்லதை செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்பு.
* உயிர் வாழ உணவு தேவை. அதுபோல் சுதந்திரமாக வாழ சிலவற்றை தியாகம் செய்.
* அனைவரிடமும் அன்பு காட்டுவதே தர்மத்தில் சிறந்தது.
* நீ பலவீனமாக இருந்தால்தான் உனக்கு தீய சிந்தனை தோன்றும்.
* பிறருக்கு உதவி செய். அதற்கு அளப்பறிய சக்தி உள்ளது.
* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. உன் வாழ்நாள் முழுவதும் அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும்.
* எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே. அதுதான் உன் மனதிற்கு நல்லது.
* பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்றால்தான் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.
* கோபப்படாதே... அது உன் முகத்தின் அழகை கெடுக்கும்.
* வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது நம் கடமை.
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே இதற்கு தீர்வு.
* மனதில் தீய எண்ணம் தோன்றும்போதே அதை அகற்றிவிடு.