திருப்பதி பெருமாளுக்கு சென்னை பக்தர் 9 கோடி நன்கொடை
ADDED :1363 days ago
திருப்பதி : சென்னையைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பணமாகவும், வீடுகளாகவுமு் சுமார் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நன்கொடையாக வழங்கினார். சென்னை ,காரப்பாக்கத்தைச் சார்ந்த பெருமாளின் பக்தரான ரேவதி விஸ்வநாதம், ரூ. 3.20 கோடி ரூபாய் ரொக்கத்தை கோவில் நிர்வாகம் நடத்தும் குழந்தைகள் மருத்துவமனை கட்டுவதற்கு நன்கொடையாக வழங்கினார், கூடவே அவரது மறைந்த சகோதரி டாக்டர் பர்வதம் விருப்பப்படி அவருக்கு சொந்தமான 6 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கான டாக்குமெண்டுகளையும் வழங்கினார்.