ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா நடந்தது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதி யாகவும் விளங்கிறது. இத்திருத்தலத்தில் தான், சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தார். மாசி மாதம் திருவிசாகத்தன்று, தாமிரபரணி பொருநல் சங்கணித் துறையிலிருந்து தீர்த்தம் எடுத்து காய்ச்சவும் என உத்தரவு, நம்மாழ்வாரிடமிருந்து பெற்று, மதுரக வி ஆழ்வாரால் கைபடாத உற்சவர் திருமேனி, நமக்கு வணங்ககிடைத்தது. இந்த நன்னாளைப்போற்றும் முறையிலேயே, ஆண்டுதோறும் மாசி தெப்பதிருவிழா 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 9 தினங்களாக, சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தார். 9ம் தினமான நேற்று முன்தினம் தேரில் வீதிஉலா வந்தார்.