உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைப் பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. விருதுநகர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கணேசன் இருக்கங்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் கோவில் ஊழியர்கள் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர் இதில் பக்தர்கள் ரொக்கமாக உண்டியலில் ரூ 60 லட்சத்து 74 ஆயிரத்து 429 தங்கம் 302 கிராம், வெள்ளி 950 கிராம், காணிக்கையாக செலுத்தி இருப்பது தெரியவந்தது இவை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !