ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை விழா
ADDED :1312 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005 மார்ச் 13 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் பிரதிஷ்டை விழா நடந்து வருகிறது.
நேற்று 18வது பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் அதிகாலையில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடந்து. விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன் சங்கரி, ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது. இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சாமி, வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.