சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
சோமனூர்: சோமனூர் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் பக்தர்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்.
சோமனூரில் உள்ள செல்வ விநாயகர், மாகாளியம்மன், சுப்பிரமணியர் கோவில் பழமையானவை. இங்கு பொங்கல் திருவிழா கடந்த, மார்ச் 29 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. ஏப்., 4 ம்தேதி விநாயகர் பொங்கலும், நேற்று முன்தினம் கம்பம் நடுதலும் நடந்தன. நேற்று அதிகாலை அம்மன் அழைத்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. காலை, 7:30 மணிக்கு பூவோடு எடுத்து வந்த பக்தர்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், மகா அபிஷேகமும் நடக்கிறது.