கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஒரு ராம பாடல்
ADDED :1306 days ago
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க அருணாசல கவிராயர் பாடிய ராமநாடக கீர்த்தனையை ராகத்துடன் பாடுங்கள்.
கண்டேன், கண்டேன், கண்டேன்
சீதையை கண்டேன் ராகவா!
அண்டருங் காணாத அரவிந்த வேதாவை
லங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)
காவி விழிகளில் உன் உருவெளி மின்ன
கனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால்
நான் சொல்லுவதென்ன
பூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன
புத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன
பாவி அரக்கியர் காவல்சிறை துன்ன
பஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன (கண்)