ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தருமை ஆதீனம் சாமி தரிசனம்
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று தமிழகத்தில் உள்ள தருமை ஆதீன மட பீடாதிபதி ஸ்ரீ -ல-ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் பூர்ண கும்ப வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். முன்னதாக மடாதிபதி கோயில் வளாகத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு உணவு அளித்தும் சிறப்பு பூஜைகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.