பழநி உண்டியல் காணிக்கை ரூ.2.71 கோடி
ADDED :1233 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் கிடைத்துள்ளது.பழநியில் தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. இந்நிலையில் பழநி மலைக்கோயிலில் நேற்று (ஏப் 21ல்) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 1,039 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 83 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 310 ,மற்றும் 111 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (ஏப்.22) மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.