நடராஜர் சன்னதியில் தீர்த்தம்
ADDED :1515 days ago
பெருமாள் கோயில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால் சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர். இங்கு நடராஜர் நடனம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காமல் தேவர்கள் மயக்கம் அடைந்தனர். கங்கை நீரை நடராஜர் தெளித்தார். இதனடிப்படையில் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.