ஸ்ரீபெரும்புதுாரில் குதிரை வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா
ADDED :1249 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் குதிரை வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ஸ்ரீ ராமனுஜரின் அவதார தலமான, ஆதிகேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீ ராமானுஜரின் 1,005ம் ஆண்டு அவதார உற்சவ பெருவிழா விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளான நேற்று, குதிரை வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.