உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.33 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், ஒரு கோடியே, 33 லட்சத்து, 17 ஆயிரத்து, 31 ரூபாய் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், ஒரு கோடியே, 33 லட்சத்து, 17 ஆயிரத்து, 31 ரூபாய், 290 கிராம் தங்கம், 919 கிராம் வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !