திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்
ADDED :1253 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு,
ஆண்டதோறும் தை , மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் கிருத்திகை விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று சித்திரை கிருத்திகை விழா விமரிசையாக
கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன. விழாவில்,
சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ப க்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களைநிறைவேற்றினர். இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தசுவாமி பெருமானின் திருவீதியுலா, மாட வீதிகளில் வந்தது. முன்னதாக பரணி உற்சவத்தில் கந்தசுவாமி பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில், எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.