அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.
அச்சிறுப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்று இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில். சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக, இரு ஆண்டுகளாக இவ்விழா நடக்கவில்லை. நேற்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள், கோவிலின் எதிரே உள்ள கொடி மரத்தில், தலைமை சிவாச்சாரியார் சங்கர் தலைமை யிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பிரம்மோற்சவ சித்திரைத் திருவிழா விற்கான கொடிஏற்பட்டது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளிஅம்மன் , உமா பார்வதி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோருக்கு