உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி வைகாசி பவுர்ணமி வழிபாடு : மே.13 முதல் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி வைகாசி பவுர்ணமி வழிபாடு : மே.13 முதல் பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக மே 13 முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் வனத்துறை அறிவித்துள்ளது.

இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி வைகாசி பவுர்ணமி வழிபாட்டிற்காக மே 13 பிரதோஷம் முதல் மே 16 வரை நான்கு நாட்கள், தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இருந்த போதிலும் தற்போதைய புயலினால் கனமழை பெய்தால் பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !