தமிழகத்தில் 20 ஆயிரம் கோவில்களில் விளக்கேற்றக்கூட வசதியில்லை
சென்னை: ‘‘தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழல் இல்லை ,’’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னை , மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நீர் தெளிப்பான், சூரிய ஒளிசக்தி வாயிலாக தானாக இயங்கும் சோலார் விளக்கு திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கோடைகாலத்தை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னைநார் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோ ர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானம் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில், வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், வெயிலின் தாக்கம் அறியாதவகையில், நீர்த் தெளிப்பான் மற்றும் சோலார் விளக்குகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது . அன்னை தமிழில் அர்ச்சனை ட்டத்தை அனைத்து கோவில்களிலும் செ யல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில், 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின், கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அறநிலையத்துறை சார்பில், சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனம் செய்ய , தீட்சதர்களுக்கு கோரிக்கைவைக் கப்ப ட்டுள்ளது. ஒரு கால பூஜை த் திட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து, 959 கோவில்களோடு, 2,000 கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட திருக்கோயில்களில், ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழ்நிலை இல்லை . இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்வில், அறநிலையத்துறை கமிஷனர்