இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
ADDED :1248 days ago
சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் நாளை 21ம் தேதி காலை 5.00 மணி முதல் மாலை 5 மணி வரை நாகை, திருப்புகளுர் அக்னீஸ்வரர் கோயிலிலும், நாளை மறுநாள் 22ம் தேதி காலை 5.00 மணி முதல் மாலை 5 மணி வரை கடலூர், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலிலும் உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது. 22ம் தேதி காலை 5.00 மணிக்கு மேல் கடலூர், திருவாமூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பன்னிருதிருமுறை பாராயாணம் நடைபெறுகிறது.
தொடர்புக்கு:
எஸ். கணேசன் 9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்