உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசக்ரம் என்பது என்ன? அதை பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன?

ஸ்ரீசக்ரம் என்பது என்ன? அதை பிரதிஷ்டை செய்வதன் நோக்கம் என்ன?


சக்தியந்திர வழிபாடுகளில் மிக உயர்ந்தது ஸ்ரீசக்ரம். யந்திர ராஜா என்ற இதனைக் கூறுவர். ஒரே அளவிலான 43 முக்கோணங்களைக் கொண்டது இந்த யந்திரம். சிவாலயங்களில் உள்ள மனோன்மணி எனப்படும் அம்பாள் சந்நிதிகளில் இச்சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்ய ஆகமநூல்களில் கூறப்படவில்லை. துர்க்கை, ராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதும், யந்திரத்தைத் தனியாக வழிபாடு செய்வதும் வழக்கில் இருந்தது. சக்திவாய்ந்த இதனை வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். உபதேசம் பெற்று உரிய நியமங்களை அறிந்து ஸ்ரீசக்ரத்தை வழிபடவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !