சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?
ADDED :1208 days ago
விரதம் என்றாலே உடலை வருத்தி கடவுள் மீது பக்தி செலுத்துவது தான். உப்பில்லாமல், சோறு இல்லாமல் பட்டினி இருப்பதே விரதம். இதன் மூலம், ஒவ்வொரு விநாடியும் உடலும், மனமும் விழிப்புடன் இருக்கும். அதாவது சுவாமியின் நினைவிலேயே இருப்பது, சுவாமியின் அருகிலேயே வாசம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அது எளிதில் கைகூடும்.