கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை : நந்தி பகவானுக்கு அபிஷேகம்
ADDED :1305 days ago
கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.