‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது ஏன்?
ADDED :1243 days ago
நீரை வணங்குதல் நமது மரபு. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது பழமொழி. ஒரு குழந்தை கருவானதில் இருந்தே, அதை உருவாக்கும் பொறுப்பை ஏற்கிறாள் தாய். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவரை யாருமே பழிக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது உலகத்திற்கு தாயாக விளங்கும் தண்ணீரை பழிக்க முடியுமா என்ன?