குத்துக்கல்வலசையில் மண்டல பூஜை விழா
ADDED :1316 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி, குத்துக்கல்வலசை காந்தாரியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 13 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாள் நிறைவை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. கலசங்களில் நிரப்பப்பட்ட புனித நீரால் மூலவர் காந்தாரியம்மன், முனீஸ்வரர், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு சந்தன காப்பு செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், குத்துக்கல்வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.