உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா

ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், துளசி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீர  ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுதலுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார  தெய்வங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடந்தது.

ஆத்தூர்: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள்  பொங்கல் வழிபாடு, கிடா பலியிடல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !