ஆடி பௌர்ணமி: திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்
ADDED :1286 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நான்கு மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.