திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் : அங்கப்பிரதட்சணமாக வலம் வந்த பக்தர்
ADDED :1192 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து, 14 கி.மீ., கிரிவலம் செல்வர். அதன்படி, இன்று பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். உலக நன்மைக்காக சிவகங்கையைச் சேர்ந்த பக்தர் அங்கப்பிரதட்சணமாக திருவண்ணாமலை கிரிவலம் வந்தார்.