உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி மக வைரவேல் திருவிழா துவங்கியது

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி மக வைரவேல் திருவிழா துவங்கியது

வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 50வது ஆண்டு பொன்விழா மற்றும் மாசி மக வைரவேல் உற்சவ திருவிழாவையொட்டி  காலை, 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது. காலையில், சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு கொடிமரத்திற்கு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் திருக்கொடி ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து முருக பக்தர்கள் வைரவேல் எடுத்து,கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். வரும், மார்ச் 1ம் தேதி  வேல்மாறல் அறக்கட்டளை சார்பில் வேல்மாறல் வழிபாடு, திருத்தணி திருப்புகழ் பாராயணம், தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி காலை, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 6ம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !